நெல்லையப்பர் கோவிலில்
அர்ச்சனை செய்த விபூதி,
ராகுகால பூஜையில் பெற்ற
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...
7 comments:
அருமை நன்பா
நன்றி நண்பா :-)
Good one!
இன்று முதல் உங்கள் விசிறி ஆகிறேன். இந்த கவிதை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிவா :-)
Nice emotion
thanks viji.
Post a Comment