மென்பனி போர்த்திய மாலையில்
மெல்லிசை கசிந்த வேளையில்
அல்லல் மறந்து அலைகளில்
விளையாடிக் கொண்டிருந்தோம்.
சினமடைந்த மேகங்கள் நம் மகிழ்வைக்
களவாட மழைச் சாரலை அனுப்பியது.
நான் அணிந்திருந்த மழையங்கியை
அவசரமாய் உனக்கு அணிவித்தேன்.
நீ வெட்கத்தை அணிந்து "அவ்வளவு
அன்பா!?" என விழிகளில் வினவினாய்.
என்னால் நகைக்க மட்டுமே முடிந்தது,
ஆம்,
நனைதலுக்கு பின் வரும் காய்ச்சலில்
உன் அன்பு தரும் இதத்தை உனக்கு
கூட கொடுக்காத வஞ்சகனான என்னால்
நகைக்க மட்டுமே முடிந்தது.
களவாட முயன்று தோற்ற மழையால்
மழை(லை)க்க மட்டுமே முடிந்தது...