Monday, May 28, 2012

பெண்ணாகிய ஊடகம்

உனக்கென்று  ஒரு வாசம் உண்டு,
இதழ்கள் உண்டு, அதில் வரிகளும் உண்டு.

உனக்குள் ஒர்  உலகம உண்டு, அதில் 
வதந்திகள் உண்டு, விளம்பரங்களும்   உண்டு.

உன் உண்மையில் சிறு பொய்களும் உண்டு.
மிகைப் படுத்தப்பட்ட உண்மையும் உண்டு.

உன்னிடம் சொல்லக் கூடாதது ரகசியம்,
ரகசியம் காக்கப்பட்டால் அது அதிசயம்.

உன்னை மதியாதவர் இப்பூமியின் அற்பம்,
உன்னை முழுவதும் படித்தவர் மிகச் சொற்பம்.

நீ பேசினால் வரலாறே மாறும்.
உன் அக்கரையில் சமூகமே  உயரும்.

பரிவருளும் பெண்ணே! பத்திரிக்கை ஊடகமே!
நீரின்றி அமையாது இவ்வுலகம், 
நீயின்றி அமையாது நற்சமூகம் . . .