அவளைப் பற்றி எழுதத் தொடங்கி
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்.
அனைத்து அகராதிகள் அலசியும்
அன்பைத் தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
எவ்வளவு விளக்கியும் புரியாத மடத்தனமும்,
எதுவுமே சொல்ல விட்டாலும் அடிமனதின்
வலிகளை புரிந்து கொள்ளும் பக்குவமும்
முரணாகவே இருந்தாலும் அழகாக இருக்கிறது.
எங்களுக்குள் சண்டை வரும் போதெல்லாம்
விட்டுக் கொடுத்து திணற வைப்பாள்.
மற்றவர்கள் வாதத்தில் என்னை
விட்டுக் கொடுக்காமல் உணர வைப்பாள்.
காயப்படுத்தாத வார்த்தைகளால் திட்டத் தெரிந்தவள்.
காயங்களைக் குணப்படுத்தும் வித்தை அறிந்தவள்.
குற்றங்களை மறக்கும் குழந்தை போன்றவள்.
அக்கறை காட்டுவதில் அன்னைக்கு நிகரவள்.
தெரிதலில் தொடங்கி புரிதலில் வளர்ந்து
பகிர்தலில் வாழ்கிறது அவளது நட்பு.
ஒவ்வொரு முறையும் தோற்று போகிறேன்.
அனைத்து அகராதிகள் அலசியும்
அன்பைத் தவிர வேறு வார்த்தை கிடைக்கவில்லை.
எவ்வளவு விளக்கியும் புரியாத மடத்தனமும்,
எதுவுமே சொல்ல விட்டாலும் அடிமனதின்
வலிகளை புரிந்து கொள்ளும் பக்குவமும்
முரணாகவே இருந்தாலும் அழகாக இருக்கிறது.
எங்களுக்குள் சண்டை வரும் போதெல்லாம்
விட்டுக் கொடுத்து திணற வைப்பாள்.
மற்றவர்கள் வாதத்தில் என்னை
விட்டுக் கொடுக்காமல் உணர வைப்பாள்.
காயப்படுத்தாத வார்த்தைகளால் திட்டத் தெரிந்தவள்.
காயங்களைக் குணப்படுத்தும் வித்தை அறிந்தவள்.
குற்றங்களை மறக்கும் குழந்தை போன்றவள்.
அக்கறை காட்டுவதில் அன்னைக்கு நிகரவள்.
தெரிதலில் தொடங்கி புரிதலில் வளர்ந்து
பகிர்தலில் வாழ்கிறது அவளது நட்பு.