அகல் விளக்குகளின் திருநாளன்று
கதிரவன் கடல் கரையும் மாலையில்
மகிழ்ச்சித் தோரண வீதியில் நீயும்,
நானும் நடந்து கொண்டிருந்தோம்.
பனிவாடை சாமரம் வீசிய
மனையொன்றின் முற்றத்தில்,
பட்டாடை உடுத்திய சிறுமி ஒருத்தி
எட்டுப் புள்ளி கோலமிட்டு அதில்
எழில்மிகு வண்ணமிட்டு அதன் கீழே
"கார்த்தி" என எழுதிக் கொண்டிருந்தாள்.
"கார்த்தி பாப்பா, நீ போட்ட கோலம்
ரொம்ப அழகா இருக்கு!!!" என்று
மழலை மொழியில் கூறி, உன்
சாதூர்யத்திற்கு நீயே சபாஷ் சொன்னாய்.
நடப்பது புரியாமல் விழித்தவாறே சிறுமி
"கார்த்திகை தீபம்" என எழுதி முடித்தாள்.
அழகியலின் உச்சத்தை உள்ளுக்குள் ரசித்து
கேலி செய்த என் கண்களைத் தவிர்க்க
நாணத்தில் நிலம் நோக்கிய உன்னைப்
போல் அந்தி வானமும் சிவந்திருந்தது...
Tuesday, November 30, 2010
Monday, November 15, 2010
நேசபுரத்து தேவதை
நெல்லையப்பர் கோவிலில்
அர்ச்சனை செய்த விபூதி,
ராகுகால பூஜையில் பெற்ற
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...
அர்ச்சனை செய்த விபூதி,
ராகுகால பூஜையில் பெற்ற
ஆயிரத்தம்மன் குங்குமம்,
சனி தோறும் விரதமிருந்த
ஆஞ்சநேயர் செந்தூரம்,
என ஒவ்வொன்றாய், விடுமுறை
முடிந்து திரும்பிய தினத்தில்,
மென்சோகம் மறைத்து நகைத்த
அம்மா என் நெற்றியில் பூசிய போது
அவளின் பாசம் போல் அவைகளும்
பொன்னிறமாய் மாறியிருந்தன...
Wednesday, November 3, 2010
ஏனோ என் கணவா?
மெய் வருத்தி செய்த பணி
மெச்சப்படாமல் போகையில்
மென்மையாய் சிரித்தீர்கள்.
மதிப்புமிகு வாடிக்கையாளரின்
வார்த்தை தடிக்கையில்
பணிவாய்ப் பொறுத்தீர்கள்.
தவறிழைத்த ஊழியனைத்
திருத்துகையில் கூட தங்கள்
தன்மை மாறவில்லை.
ஆனால்,
என் காதல் குழைத்த சாம்பாரில்
காரம் குறைகையில் மட்டும்
கடிவதேனோ?
மெச்சப்படாமல் போகையில்
மென்மையாய் சிரித்தீர்கள்.
மதிப்புமிகு வாடிக்கையாளரின்
வார்த்தை தடிக்கையில்
பணிவாய்ப் பொறுத்தீர்கள்.
தவறிழைத்த ஊழியனைத்
திருத்துகையில் கூட தங்கள்
தன்மை மாறவில்லை.
ஆனால்,
என் காதல் குழைத்த சாம்பாரில்
காரம் குறைகையில் மட்டும்
கடிவதேனோ?
Subscribe to:
Posts (Atom)