வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த
ஒலிநாடாவில் பதியப்பட்ட தங்கையின்
பள்ளிக்கூட ஆங்கிலப் பாடல்களில்
மழலை இன்னமும் உள்ளது.
என் பதின்வயது பிறந்த தினங்களை
பரவசப்படுத்திய பழுப்பேறிய
வாழ்த்தட்டைகளில் நண்பனின்
வாழ்த்தட்டைகளில் நண்பனின்
பாசம் இன்னமும் உள்ளது.
நேந்து விட்ட சிகை மற்றும் முழியுடன்
நானும், சுற்றி உறவினர்களும் சிரிக்கும்
புகைப்படத்தில் கோவில் திருவிழாவின்
நேந்து விட்ட சிகை மற்றும் முழியுடன்
நானும், சுற்றி உறவினர்களும் சிரிக்கும்
புகைப்படத்தில் கோவில் திருவிழாவின்
குதூகலம் இன்னமும் உள்ளது.
அழகியலும், அனுபவமும் சொல்லும்
நினைவுச் சின்னங்கள் நிரம்ப உள்ளது
என் பொக்கிஷப் பெட்டகத்தில்.
ஆனால்,
நரைகளின் நாட்களில், நினைவுகளின்
உணவிற்கு , வரிகள் தேடி மொழிகள்
தோற்ற வர்ணனைக்கடங்கா உன் ரகசிய
வெட்கங்களை எவ்விதம் பதிவது???