Tuesday, April 1, 2014

முட்டாள்கள் தினம்

மெத்தப் பிரயத்தனப்பட்டு கண்ட பழதான
தந்திரம் கொண்டு என்னை ஏமாற்ற முயல்கிறாய்,

மத்தம் மதியுடைக்கும் பிணி முதிர்வின்
பிரதி போல நானும் ஏமாந்து நடிக்கிறேன்.

சத்த நாடிகளின் சந்தோஷப் பாய்ச்சலின்
சங்கீதத்திற்கேற்ப எள்ளி நகையாடுகிறாய். 

மொத்த ரம்மியமும் பருகிக் கொண்டே
பொய்க் கோபம் காட்டி முறைக்கிறேன்.

நித்தம் நிலை மாறும் பெருவெளியைப் போல்
குறுநகைத்து பயந்து குறும்பு காட்டுகிறாய்.

பித்தம் பிரவாகமுடைத்த பேதைகளாய்
நாம் களித்திருக்கும் தருணத்திலே,
ஒத்த மனங்களின் தந்திரம் புரியாமல்
முட்டாளாகிறது  முட்டாள்கள் தினம்.