Friday, May 28, 2010

ஏதேன் தோட்டத்து கதை

ஆதாமுக்கும் ஏவாளுக்கும் நிச்சயதார்த்தம்
அடுத்த மாத இறுதியில் சுபமுகூர்த்தம்
ஆனந்த வைபோகத்தின் ஆரம்ப விதை
இது சந்தோஷக்காலத்து நிகழ்வுகளின் கதை.

தமிழில் தொடங்கி செப்பு மொழிகள் பத்தாமல்
அலுவலகத்தில் 'ஜாவா'விலும்  ஏவாள் பெயர்
எழுதிப் பார்த்த வழக்கில்  மேலாளரிடம்
அசட்டுப்  புன்னகை புரிகிறான் ஆதாம். 

மணநாளில் அணிய வேண்டிய நகை,
புடவை, அலங்காரங்களைப் பற்றி
அளவில்லா முனைப்புடன் சானியா மிர்சா
போல சிந்தனை செய்கிறாள் ஏவாள்.

"மடிவதாயினும் மது, மாமிசம் உண்பேன்" என்று
குடிகாரர்கள் சபையில் உறுதி  பூண்ட  ஆதாம்,
நண்பன் கொடுத்த  மது  விருந்தில் கூட ஏவாள்
சைவம் என்பதால் ஆப்பிள் மட்டுமே தின்கிறான்.

நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்.

வங்கியில் சேமித்த பணம் அலைபேசி கட்டணத்திற்கே
பத்தவில்லை என்பதால் திருமணத்திற்கு
கடன் வாங்க கலாநிதி மாறன் வீட்டில் காத்திருக்கிறார்
இருவரையும் படைத்த அப்பாவி கடவுள்...

6 comments:

Raji said...

Very nice da.. :)

Rama said...

Hi Sundar,
Sema..Sema ..
I was reminded of ur oors only on reading dis..
Is my guess correct?
Kavithai super!!!!!!!!!!!!

Shunmuga Sundar said...

thanks rama and raji. U r right, two of my teammates and she were the inspirations on this.

Sivasankar M said...

"நுண்ணறிவுடனும், நினைவுத்திறனுடனும்
இருந்த ஏவாள் கொடியில் காயும் துணியுடன்
தனியாக நகைத்து பேசுவதைப் பார்த்து
அச்சமடைகிறார்கள் ஏவாளின் அறைத்தோழிகள்."

lol.. :)
Too good da..

Bala said...

Machn kalakkitta da!!! supera irukku...

Shunmuga Sundar said...

thanks siva and bala :-)
@siva, think u would ve seen more such events in the recent past ??