Monday, May 10, 2010

ஒரு 'டூக்காவும்' ஒரு 'பழமும்'

அன்பின் உச்சம் கோபம் என்பதால்
அம்மா அப்பாவிற்குள் சண்டைகள் புதிதல்ல.

வேதனையோடு விடிகிறது அந்த பொழுது.
எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள்
கடும் சொற்களாய் வெடிக்கிறது,
வாக்குவாதங்களின் தீவிரத்தில்
இருவருமே சளைக்கவில்லை.
கோபங்கள் கொட்டிய பின்பு
மௌனங்கள் மட்டுமே மிச்சம்.
விதைத்தவர்கள் மோதலில்
வெப்பம்  என்னைத்  தாக்குகிறது.
விவரம் அறியாத மருத்துவர் அதை
கடுங்குளிர்க் காய்ச்சல் என்கிறார்.
என்னைப் பார்த்து  அழும் அம்மாவை
அன்பாக தேற்றுகிறார் அப்பா,
சற்று முன்பு நடந்த யுத்தம்
சத்தமில்லாமல் முகவரி தொலைக்கிறது.
இது தான் இல்லறம் என்பது
விளங்காமல் விழிக்கிறேன் நான். 

மன்னிப்பின்றி மடியும் சண்டைகள்
புரிவதில் அம்மா அப்பாவும்
சிறு பிள்ளைகள் தான் போல!

3 comments:

Raji said...

Amazing da.. No words to Comment... :) :) :)

Mushaffa said...

its all Greek to me.. i wish u had written your blog in english...

Shunmuga Sundar said...

@mushaffa , I felt blogging is one place where i can express my love towards tamil. thatsy i chose to write in tamil. Anyways i will translate everything to you :-)

@raji , thanks de :-)