Sunday, March 24, 2013

படித்ததும் புரிந்ததும்

இங்கு யாரும் நீ முதல் நாள்
பார்த்த யாருமாய் இல்லை.
நீ கூட முதல் நாள் யாரும்
பார்த்த நீயாய் இல்லை.

உன் எதிர்பார்ப்புகளால்
யாரையும் மாற்ற முடியாது.
உன்னால்  ஒருவரை  மாற்ற இயலும்,
அது நீ...

புரிந்து  கொள்ளுதல் குறைந்து
போகும் பொது பிரிந்து செல்,
புரிந்து கொள்வாய்.

மாற்ற முடியாதவைகளை
ஏற்றுக்கொள்ள பழகு.
ஏற்றுக்கொள்ளவும்
முடியாவிடில் விலகி இரு. 

சுதந்திரம் என்பது கொடுக்கப் படுவதல்ல,
பறிக்கப்படாமல் இருப்பது...

அன்பு என்பது கட்டுபாட்டுக்குள்
வைத்து கவனிப்பது அல்ல,
திரும்பும் என்ற நம்பிக்கையில்
பறக்க விடுவது... 

6 comments:

Raji said...

Love it !! Awesome !! :)

Premnath Thirumalaisamy said...

Kalakariye baa nee ..

Shunmuga Sundar said...

@Premnath, Thanks baa

Shunmuga Sundar said...

@Raji, Thanks da

Anonymous said...

Very thoughtful ..inspiring really..!

Shunmuga Sundar said...

Thanks :-)