Monday, February 28, 2011

ஆனந்த சயனம்

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

ஒற்றை தோகை தென்றல் வீச 
ஒயிலுருவே  துயில் உறங்கு!!

மலர்க் கேசத்தை  மயிலிறகு கோத
மறைகளின்  மணியே மகிழ்வுறங்கு!!

சப்த உலகிற்கு தாழிட்டு விட்டு 
யாழிசை வருட  நீயுறங்கு!!

கதை பேசிய களைப்புகள்
கணப் பொழுதில் தொலைய 
கற்பகமே கண்ணுறங்கு!!

மதிமுகம் சுருக்கிய வேதனையை
விறகாக்கி எரித்த வெப்பத்தில் 
குளிர் காய்ந்து சுகமுறங்கு!!

கயல்விழியே கண்ணுறங்கு!!
கவின்மகளே கண்ணுறங்கு!!

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அன்பும் அரவணைப்பும் நிறைந்த
ஒரு தாயின் தாலாட்டினக் கேட்ட சுகம்
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

தூக்கம் என் கண்களை தழுவுகிறது.. :) அறுமை.. :)

Shunmuga Sundar said...

மிக்க நன்றி நண்பர்களே :-)