Friday, February 11, 2011

யாமறிந்த ஒன்று

சிரிக்க வைக்கும் வித்தை அறிந்த,
நாகரீகச் சபையில் பழகத் தெரிந்த,
வசிய மொழியில் புலமை பெற்ற,
ரசனை மிகுந்த, சாந்தம் கொண்ட,
உனக்கு பிடித்த  யாராகவும்
நான் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
உன்னை உயிருக்குள் வைத்து
என்னைப் போல் நேசிக்க
எவராலும் முடியாது,
உன்னாலும் கூட ...

7 comments:

Anonymous said...

உங்கள் ரசனை ஊர் அறிந்தது தலைவா..!

Samba said...

yaar ange! ip-pulavarku kodu aayiram porkaasugal. :P

Yaathoramani.blogspot.com said...

ஒருவேளை உண்மையாக நேசித்தால்
அறிதல்/தெரிதல்/பெறுதல்/கொள்ளுதல்/
எல்லாமே அடைவதற்கான முயற்சியில்
இறங்கி விடுவோமோ?
நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

Krishna said...

nice Sundar :)

- Senthil

Shunmuga Sundar said...

@Anonymous friend, Aswin and Senthil, Thanks a lot
@Ramani, மிக்க நன்றி.அந்த முயற்சிகள் தேவையே இல்லை. உண்மையான நேசத்தை விட அவைகள் பெரிதல்ல எனத் தோன்றுகிறது :-)

Sattish said...

simply superb na !! tat too in particular
உன்னை உயிருக்குள் வைத்து
என்னைப் போல் நேசிக்க
எவராலும் முடியாது,
உன்னாலும் கூட ...

chanceless !!

Shunmuga Sundar said...

Thanks da Sathish :-)