Sunday, April 11, 2010

ஓர் மின்வெட்டின் போது...

அது ஒரு கோடை கால இரவு,
முன்னறிவிப்பின்றி மின்விளக்குகள் அணைந்து
மின்வெட்டு உலகிற்கு அறிவிக்கப்படுகிறது,
பிரிதலின் போது பாசம் புரிவதைப் போல
மின்சாரத்துடனான நமது பந்தம் உணரப்படுகிறது.

அலுவலகப் பிரச்சனையை அலசியவாறே
மொட்டை மாடியில் தென்றலை
ரசிக்கிறார்கள் அப்பாக்கள்.

வீட்டுத் திண்ணையின் மகளிர் மாநாட்டில்
தொடர் நாடகங்களின் நிலவரங்களை
விவாதிக்கிறார்கள் அம்மாக்கள்.

"இங்கே மின்வெட்டு, அங்கே?" என
கல்லூரி நண்பனை குறுந்தகவலில்
வினவுகிறார்கள் இளம்பெண்கள்.

விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க
முடியாததால் மின்சார வாரியத்தை
சபிக்கிறார்கள் இளைஞர்கள்.

மருமகளை மனதுக்குள் திட்டியவாறே
தொட்டிலில் அழும் பேரக்குழந்தையை
தாலாட்டுகிறார்கள் பாட்டிகள்.

நடுவயது கதைகளை நண்பர்களுடன்
பகிர்ந்தவாறே பக்கத்து பூங்காவில்
நடக்கிறார்கள் தாத்தாக்கள்.

வீட்டுப் பாடத்திலிருந்து தப்பிய
மகிழ்ச்சியில் உற்சாகத்துடன்
விளையாடுகிறார்கள் குழந்தைகள்.

இன்பச் சுற்றுலா முடிந்து திரும்புவது போல
எரியும் விளக்குகளில் மீண்டும்
தொடங்குகிறது நம் மின்சார வாழ்வு. 

9 comments:

RaGhaV said...

:-))

Shunmuga Sundar said...

vilai mathikka mudiyaatha ungal punnagaikku nandri :-)

santha said...

Good one. Start writing more of non romantic ones.

Shunmuga Sundar said...

@santha anna : sure :-)

Sattish said...

Anna kalakureenga !!

Bharath Ram Vivek N said...

Awesome observation of PowerCut portrayed with beautiful poetic wordings :-)

Shunmuga Sundar said...

thanks sattish and bharath :-)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குன் தோழரே....

Shunmuga Sundar said...

மிக்க நன்றி கமலேஷ் :-)