Saturday, October 30, 2010

இசையோடிணைந்த வாழ்வு

விடிகாலை பூசாரி, வியர்வை சிந்தும் ஆசாரி,
எல்லைப் போராளி, நள்ளிரவு உழைப்பாளி ,    
சிகையழகு கலைஞன், கணினி இளைஞன்,
என எல்லோர் வாழ்விலும்
பக்திப் பாடலாக, பண்பலை கீதமாக
பதிவுத் தகடாக இசை
நீக்கமற நிறைந்துள்ளது.

என்  இயந்திர வாழ்விலும்
இசைப்பஞ்சம் வரப் போவதில்லை, 
என்னிடத்தில்
'அப்புறம்' மற்றும் அலைபேசியும்,
உன்னிடத்தில்
அந்நாள் சம்பவக் கதைகளும் 
இருக்கும் வரையில்...

No comments: